Published : 12 Sep 2013 04:08 PM
Last Updated : 12 Sep 2013 04:08 PM

சின்னத்திரையில் டிமாண்ட் : விஜய், சூர்யா, அஜித் வரிசையில் கார்த்தி!

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'பிரியாணி' மற்றும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஆகிய படங்களின் டிவி உரிமையை 23 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது சன் டி.வி நிறுவனம்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி, வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பிரியாணி' படத்தினையும், ராஜேஷ் இயக்கத்தில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

முதல் 'பிரியாணி' படத்தின் படப்பிடிப்பே துவங்கியது. படத்தினை செப்டம்பர் வெளியீட முடிவுசெய்து ஆரம்பித்தார்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனம் தற்போது 'பிரியாணி' படத்தினை பொங்கல் 2014-க்கு ஒத்திவைத்துவிட்டது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தினை தீபாவளி வெளியிடாக வரும் என்று அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “'பிரியாணி' படத்தினை செப்டம்பர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். ஆனால் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் தீபாவளி வெளியீடு என்று தீர்மானித்து தியேட்டர் ஒப்பந்தத்தினை ஆரம்பித்துவிட்டோம். ஆகையால் 'பிரியாணி' படத்தினை பொங்கல் 2014, 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தினை தீபாவளி 2013-ல் வெளியிட தீர்மானித்து இருக்கிறோம்.

இரண்டு படங்களின் டிவி உரிமையையும் சன் டிவி நிறுவனம் 23 கோடிக்கு வாங்கியுள்ளது சந்தோஷமாக இருக்கிறது. விஜய் நடித்த 'தலைவா' படத்தினை 15 கோடி ரூபாய்க்கும், அஜித் நடித்துவரும் 'வீரம்' படத்தினை 13 கோடிக்கும், சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த படத்தினை 15 கோடி ரூபாய்க்கும் அந்நிறுவனவே வாங்கி இருக்கிறது.

கார்த்தி தற்போது தான் 8வது படத்தில் நடித்து வருகிறார். விஜய், அஜித், சூர்யா படங்களின் டி.வி உரிமைக்கு நிகராக டிவி உரிமை விலைபோயுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

'பிரியாணி' மற்றும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்தி, 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x