Published : 09 Sep 2016 01:01 PM
Last Updated : 09 Sep 2016 01:01 PM
காவிரி பிரச்சினையில் சமூக வலைதளங்களில் நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என சுஹாசினி மணிரத்னம் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் பாஜக, மஜத உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ளன.
பந்த் காரணமாக கர்நாடகாவில் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கன்னட திரையுலகினரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகிறார். இதில் சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் காவிரி பிரச்சினையில் சுஹாசினி மணிரத்னம், கர்நாடகாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சுஹாசினி, ""ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில், அரசியல் ரீதியாக நான் சில கருத்துகளை தெரிவித்திருப்பதாக பரப்பப்பட்டு வருகிறது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
எனக்கும் அந்த கருத்துகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. காவிரி பிரச்சினையில் சமூக வலைதளங்களில் நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அத்தகைய புனையப்பட்ட ட்வீட்களை தயவுசெய்து பொருட்படுத்தாதீர்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சுஹாசினி மணிரத்னம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT