Published : 14 Jan 2017 01:28 PM
Last Updated : 14 Jan 2017 01:28 PM

நான் ஜல்லிக்கட்டை ஒருபோதும் எதிர்த்ததில்லை: நடிகை த்ரிஷா

ஜல்லிக்கட்டு தடை தமிழகம் முழுதும் கடும் ஆர்பாட்டங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ள நிலையில் சிவகங்கையில் த்ரிஷா நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பு போராட்டங்களினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

த்ரிஷா நடிக்கும் கர்ஜனை படப்படிப்புக்கு ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனில், த்ரிஷா ஜல்லிக்கட்டுத் தடைக்குக் காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் என்று ஒருதரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து சிவகங்கையில் கர்ஜனை படப்பிடிப்பிலும் த்ரிஷாவுக்கு எதிராக கோஷங்கள், ஆர்பாட்டங்கள், எதிர்ப்புகள் கிளம்ப படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் த்ரிஷா தெரிவித்திருப்பதாவது:

பீட்டா அமைப்பில் இருந்தாலும் நான் ஒரு போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதில்லை. இதற்காக ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் மரியாதை குறைவாக நடத்துவதுதான் தமிழ்ப் பண்பாடா?

இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளவும் தமிழ்ப் பண்பாடு பற்றி பேசவும் வெட்கப்பட வேண்டும்.

என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x