Last Updated : 22 Oct, 2013 11:55 AM

 

Published : 22 Oct 2013 11:55 AM
Last Updated : 22 Oct 2013 11:55 AM

தெலுங்கிலும் கால்பதித்த யு.டிவி!

இந்தி, தமிழ், மலையாளத் திரையுலகினைத் தொடர்ந்து தெலுங்கிலும் தனது தயாரிப்பை தொடங்கி இருக்கிறது யு.டிவி நிறுவனம்.

இந்தி திரையுலகில் பல பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வரும் நிறுவனம் யு.டிவி, அதனைத் தொடர்ந்து தமிழிலும், மலையாளத்திலும் படங்களைத் தயாரித்து வந்தது.

தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனது தயாரிப்பைத் தொடங்கி இருக்கிறது.

பல படங்களுக்கு வசனம் மற்றும் கதையமைப்பில் உதவி செய்தவர் கோர்ட்லா சிவா. இவர் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் முதன் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இயக்கிய படம் 'மிர்ச்சி'.

தொடர்ச்சியாக பிரபாஸ் படங்கள் சறுக்கி வந்த நிலையில், பிரபாஸுக்கு 'மிர்ச்சி' நீண்ட நாள் கழித்து ஒரு ஹிட்டடித்தது.

தற்போது மகேஷ்பாபு - யு.டிவி நிறுவனம் இணையும் படத்தினையும் இயக்கவிருக்கிறார் கோர்ட்லா சிவா. இப்படத்தினை இந்திரா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது யு.டிவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x