Published : 11 Oct 2014 11:10 AM
Last Updated : 11 Oct 2014 11:10 AM
சீனாவில் சான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 19 பேர் பலியாகினர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சான்சி மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமாணப் பணி நடந்து வந்தது. அதற்காக பணியாட்கள் சிலர் அப்பகுதியில் முகாம்கள் அமைத்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாம்கள் மண்ணில் புதைந்தன.
இதில் 21 பேர் சிக்கிக் கொண்டனர். 19 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் மீட்கப்பட்டனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT