Published : 07 Oct 2014 02:16 PM
Last Updated : 07 Oct 2014 02:16 PM

தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்தனர். சர்வதேச கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை மீனவர் சங்கத் தலைவர் டி.சேசுராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 30-ம் தேதி தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அக்டோபர் 10 வரை சிறைக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று சிறைப்பிடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x