Published : 29 Apr 2017 12:50 PM
Last Updated : 29 Apr 2017 12:50 PM
மக்களிடையே 'பாகுபலி 2' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார்.
விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2'. இந்தியளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைக்கும் என்று திரையுலக நிபுணர்கள் கணித்திருந்தனர்.
இந்நிலையில் ’பாகுபலி 2’ படம் கொண்டாடப்பட்டு வருவதற்கு தங்கர் பச்சான் "மக்கள் வாழ்வியல் குறித்த திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் காலம் என்றைக்கு உருவாகுமோ அன்றைக்குத்தான் அரசியலிலும் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்று பொருள்.
அதுவரை பாகுபலி போன்ற திரைப்படங்களும் கொண்டாடப்படும். அவர்களை சீரழித்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் கொண்டாடப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT