Published : 03 Aug 2016 12:34 PM
Last Updated : 03 Aug 2016 12:34 PM
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'ரெமோ' படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடலை ஜூன் 23ம் தேதி இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து படத்தின் சில காட்சிகளை படமாக்கி வந்தது படக்குழு. ஒரு நாள் படப்பிடிப்பை மட்டும் மிச்சம் வைத்து, நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு அப்படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு.
படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதைத் தொடர்ந்து, படக்குழுவினர் ஒவ்வொருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு படக்குழு மாலை அணிவித்து கெளரவித்தது.
தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'ரெமோ' அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT