Published : 20 Jun 2017 09:33 PM
Last Updated : 20 Jun 2017 09:33 PM
விவசாயிகள் பாவம் என அறிக்கை விடுபவர்களை முதலில் விவசாயம் செய்யச் சொல்லுங்கள் என்று இயக்குநர் சேரன் விஷாலை மறைமுகமாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சேரன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''ஆடு நனைகிறதென ஓநாய்கள் கவலை கொள்ளும்.விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கை விடுவார்கள், அவர்களை முதலில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்யச் சொல்லுங்க'' என்று ட்வீட் செய்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சேரன் எழுதி வெளியிட்ட ட்விட்டர் பதிவு விஷாலை மறைமுக சாடியதாக அமைந்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது என்று விஷாலுக்கு இயக்குநர் சேரன் காட்டமான கடிதம் எழுதியதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT