Last Updated : 27 Jan, 2017 06:46 PM

 

Published : 27 Jan 2017 06:46 PM
Last Updated : 27 Jan 2017 06:46 PM

துருவங்கள் 16ஐத் தொடர்ந்து நரகாசுரன்: இயக்குநர் கார்த்திக் நரேன்

'துருவங்கள் 16' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படம் 'நரகாசுரன்' என்று இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துருவங்கள் 16'. கடந்தாண்டின் இறுதிப்படமாக இப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுமையான திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் தங்களுடைய சமூக வலைதளத்திலும், நேரிலும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 2016-ம் ஆண்டில் இறுதியாக வெளியான லாபகரமான படம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

இயக்குநர் கார்த்தி நரேன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது தனது அடுத்த படம் குறித்து, "2-வது படம் ’நரகாசுரன்’... மிகத் தீவிரமான மர்மத் திரைப்படம். ’துருவங்கள் 16’ கதை வர்ணனையையும் மிஞ்சும். இப்போதைக்கு படத்தின் தலைப்பை தவிர வேறு எதையும் எங்களால் கூற முடியாது.

இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். மேலும் தகவல்கள் விரைவில். தேவதைகள் மட்டுமல்ல, சாத்தான்களுக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும்" என்று ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கார்த்திக் நரேன்.

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் தேர்வில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x