Last Updated : 04 Aug, 2016 02:28 PM

 

Published : 04 Aug 2016 02:28 PM
Last Updated : 04 Aug 2016 02:28 PM

சூர்யாவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை

முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க, முத்தையா இயக்கத்தில் வெளியான படம் 'மருது'. இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தை அன்புச்செழியன் தயாரித்திருந்தார். இப்படத்துக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இப்படத்தைத் தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் முத்தையா. இதற்காக அலுவலகம் எல்லாம் போட்டு கதை எழுதி வருகிறார்.

முத்தையா இயக்கத்தில் உருவாகும் இப்படமும் உறவுகள், மண் சார்ந்த களம் என்று அவரது முந்தைய பட பாணியில் அமைய உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கதையாக்க பணிகளை முடித்துவிட்டு செப்டம்பர், அக்டோபரில் படப்பிடிப்பு நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இக்கதையில் சூர்யா நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

இப்படத்தின் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. படப்பிடிப்பு தேதிகள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனைத்து முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x