Last Updated : 23 Jun, 2016 02:45 PM

 

Published : 23 Jun 2016 02:45 PM
Last Updated : 23 Jun 2016 02:45 PM

வரி ஏய்ப்பு, நிதி மோசடி குற்றச்சாட்டு: லைகா நிறுவனம் மறுப்பு

பிரான்ஸ் நாட்டில் லைக்கா நிறுவனம் நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக கைது நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு லைக்கா நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, "கடந்த இரு தினங்களாக லைகா மொபைல், லைகா தயாரிப்பு நிறுவனம் குறித்து தமிழ்நாட்டு ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி.

லைகா மொபைல் நிறுவனம் 21 நாடுகளில் தொலைதொடர்பு சேவை அளித்து வருகிறது. அதுவும் குறிப்பாக அதிக செலவு வைக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவையைப் பெற முடியாதவர்களுக்காக நாங்கள் சேவை வழங்கி விருகிறோம்.

லைகா தயாரிப்பு நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

தற்போது நாங்கள் பிரபல தமிழ் நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அக்‌ஷய்குமார், தனுஷ், ஜி.பி.பிரகாச்ஜ், விஜய் ஆண்டனி ஆகியோருடன் பணியாற்றுகிறோம். இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடனும் தொடர்பில் இருக்கிறோம்.

எங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சட்டபூர்வமாக இயங்கிவருகிறது. எங்கள் நிறுவனத்துக்கு எதிராக சட்டப்படி எந்த குற்றச்சாட்டும் இல்லை. பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்று லைக்கா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x