Last Updated : 08 Apr, 2017 03:53 PM

 

Published : 08 Apr 2017 03:53 PM
Last Updated : 08 Apr 2017 03:53 PM

தணிக்கையில் யு சான்றிதழ்: ஏப்.14-ல் வெளியாகிறது பவர் பாண்டி

தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 14-ம் தேதி 'பவர் பாண்டி' வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

தனுஷ் இயக்குநராக அறிமுகமாவுள்ள படம் 'பவர் பாண்டி'. ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

அனைத்துப் பணிகளும் முடிவுபெறவே, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'பவர் பாண்டி' படத்தைப் பார்த்து 'யு' சான்றிதழ் வழங்கவே மகிழ்ச்சியடைந்தது படக்குழு. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x