Last Updated : 13 Nov, 2013 11:13 AM

 

Published : 13 Nov 2013 11:13 AM
Last Updated : 13 Nov 2013 11:13 AM

விண்ணைத்தாண்டி வருவாயா பார்ட்-2 அல்ல : கெளதம் மேனன்

கெளதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்று ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிம்பு நடிக்கும் படத்தினை கெளதம் மேனன் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் யார் தயாரிப்பாளர், நாயகி யார் என்பது தெரியாமல் இருந்தன. அதுமட்டுமன்றி, படத்தினைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

“கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை அடையார் பகுதிகளில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். படத்தின் நாயகி யார் என்பது முடிவாகவில்லை.

இப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் அல்ல” என்று தெரிவித்திருக்கிறது ஃபோட்டான் கதாஸ் நிறுவனம்.

இப்படத்தின் நாயகியாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று கெளதம் மேனன் முடிவு செய்திருக்கிறாராம். ஒளிப்பதிவாளராக 'மரியான்' ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸ் பணியாற்றி வருகிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றுவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x