Last Updated : 27 Jan, 2014 12:44 PM

 

Published : 27 Jan 2014 12:44 PM
Last Updated : 27 Jan 2014 12:44 PM

பார்த்திபன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

பார்த்திபன் இயக்கி வரும் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

தான் இயக்கும் படங்களில் நாயகனாக நடித்து வந்த பார்த்திபன், இயக்குநர் பொறுப்பு மட்டும் போதும் என்று இயக்கி வரும் படம் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்'. முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் கெளரவ தோற்றத்திற்கு விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அணுகியிருக்கிறார் பார்த்திபன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் தளத்தில் “’கதை திரைக்கதை வசனம் இயக்க’த்தில் நடிக்க வேண்டும் என்று கேட்ட மறுநாளே தளத்திற்கு வந்து நின்றார்.. Sorry, உட்கார்ந்தார் விஜய் சேதுபதி.அதுவும் காரில் வந்தால் நேரம் ஆகிவிடும் என பைக்கில் வந்தார்.

கார் கண்ணாடியின் வைப்பரில் சிக்காத இடத்தில் ஒட்டிக் கொள்ளும் பசும் பூவாய் ஒட்டிக் கொண்டது அவரது நட்பூ,” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x