Last Updated : 28 Oct, 2015 03:28 PM

 

Published : 28 Oct 2015 03:28 PM
Last Updated : 28 Oct 2015 03:28 PM

சிவகார்த்திகேயனின் புதிய படம்: கிட்டிய எட்டு தகவல்கள்

> புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கிறது சிவகார்த்திகேயனின் புதிய படம்.

> 'ரஜினிமுருகன்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

> கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

> புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கவிருக்கும் இப்படத்தை ராஜா தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

> நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்துக்கான போட்டோ ஷூட்டை சமீபத்தில் புகைப்பட நிபுணர் வெங்கட்ராம் செய்திருக்கிறார். பிப்ரவரி 2016 வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

> முதலாவதாக ஒரு பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரையும் வைத்து காட்சிப்படுத்த இருக்கிறார்கள். 2 நாட்கள் மட்டும் அரங்குகளில் படமாக்கிவிட்டு, பின்பு சென்னை மெட்ரோ ரயிலில் படமாக்க இருக்கிறார்கள்.

> இப்படத்துக்கான ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புக்கும் முன்பு ஒரு போட்டோ ஷூட் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஏனென்று விசாரித்தபோது, ஒவ்வொரு கட்டத்திலும் எந்த மாதிரியான காட்சிகளை காட்சிப்படுத்த இருக்கிறோமோ, அதனை அப்படியே போட்டோ ஷூட் செய்து பார்த்து சரியாக இருக்குமா என்பதற்காகத் தான் இந்த திட்டம் என்கிறார்கள்.

> இப்படத்துக்கான கிராபிக்ஸ் காட்சிகளை 'நான் ஈ', ‘மகதீரா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய கமலக்கண்ணன் மேற்பார்வை செய்யவிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x