Published : 26 Jun 2017 12:57 PM
Last Updated : 26 Jun 2017 12:57 PM
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் ஜுன் 30-ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல்.
ஜூன் 30-ம் தேதி 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியாகும் என படக்குழு அறிவித்து, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியது. ஆனால், தற்போது திட்டமிட்டப்படி வெளியீடு இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விசாரித்த போது, "தயாரிப்பு நிறுவனம் பணப்பிரச்சினையில் இருப்பதால், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜூன் 30-ம் தேதி வெளியீடு சந்தேகமே" என்று தெரிவித்தார்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.
இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைக்கவே, மறுதணிக்கைக்கு சென்றார்கள். மறுதணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் பட வெளியீடு மீண்டும் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT