Published : 05 Sep 2018 09:16 AM
Last Updated : 05 Sep 2018 09:16 AM
விநாயகர் சதுர்த்தி வெளியீடாக வரவுள்ள ‘சீமராஜா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடந்தது. சிவகார்த்திகேயன், சமந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், படத்தின் இயக்குநர் பொன்ராம் பேசியதாவது:
இந்தப் படத்தின் ஐடியா குறித்து, ‘ரஜினிமுருகன்’ படப்பிடிப்பின்போது நானும் சிவாவும் பேசினோம். காதல், காமெடி என வழக்கமான படமாக இல்லாமல் புதுசா ஒண்ணு பண்ணனும் என நினைத்தோம். மண்ணுக்காகப் போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் இந்த படத்தில் இருக்கு. கதை கேட்டவுடன் ‘நான் நெகடிவ் கேரக்டர் பண்றதில்லையே’ என்றார் சிம்ரன். பின்னர் கதையின் விஷயங்களை புரிந்துகொண்டு, நடிக்க ஒப்புக்கொண்டார். ஒரு நாயகியை பாடலுக்கு மட்டும்தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கிறது. இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக்கொண்டு, நாங்களே அசரும் வகையில் சிலம்பம் சுற்றினார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் கொண்டாடும் படமாக ‘சீமராஜா’ இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT