Published : 07 Sep 2018 09:16 AM
Last Updated : 07 Sep 2018 09:16 AM

சினிமாவில் எழுத்தாளர் ஆகவேண்டும் என ஆசை

நியூஸ் 7 சேனலில் ‘சுற்றலாம் சுவைக்கலாம் சீசன் 2’ நிகழ்ச்சி தொகுப்பாளர் அபிஷேக் ராஜா சமீபத்தில் வெளியான  ’இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் நடிகராகி இருக்கிறார்.

‘‘சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, தொகுப்பாளர்கள் அரைத்த மாவையே அரைக்கிறாங்களோ என்ற எண்ணம் வந்துவிடும். அதுபோன்ற நிகழ்ச்சியில் இருந்து, இப்படி ஒரு பக்காவான நிகழ்ச்சியை ஊர் சுற்றிக்கொண்டே செய்யும் வாய்ப்பு அமைந்ததே என் அதிர்ஷ்டம்தான். ‘சுற்றலாம் சுவைக்கலாம்’ செம ஜாலியான நிகழ்ச்சி.

எனக்கு சொந்த ஊர் மதுரை. என் குடும்பம் இசைக் குடும்பம். அப்பா, அம்மா, அக்கா, மனைவி என என் மீது அலாதி அன்பு கொண்டவர்களால்தான் மீடியா துறையில் உற்சாகமாக, சுதந்திரமாக இயங்கி வருகிறேன்.  ‘ஜிகர்தண்டா’ படத்தில் உதவி இயக்குநர். இப்போது ‘இமைக்கா நொடிகள்’ படத்தின்மூலம் நடிகன் வாய்ப்பு.. இவை எல்லாமே அதுவாக அமைந்ததுதான்.

இதெற்கெல்லாம் முன்பு பிஹைண்ட்வுட் இணையதள சேனலில் ஆர்ஜே என மீடியா அனுபவமும் உண்டு. நடிப்பு என்பது நானே எடுத்துக்கொண்ட துறை அல்ல. அதுவாக அமைந்தது.

என் எண்ணம் முழுக்க எழுத்து துறை மீதுதான் இருக்கிறது. அதுவும் சினிமா சார்ந்த எழுத்து துறை. அதில் தடம் பதிப்பதற்கான முயற்சியுடன் ஆர்வத்தோடு பயணித்து வருகிறேன். அதில் தனித்து சாதனை படைக்க வேண்டும். பார்க்கலாம்’’ என்கிறார் அபிஷேக் ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x