Published : 26 Sep 2014 07:59 PM
Last Updated : 26 Sep 2014 07:59 PM
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் அஜீத் சேத் வெள்ளிக்கிழமை கூறும்போது, "தான் ஊரில் இல்லாத நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது இருந்தால், அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை அணுகுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்" என்றார்.
பிரதமர் மோடி இப்போது அமெரிக்க சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் நாட்டில் இல்லாதபோது முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ராஜ்நாத் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் ராஜ்நாத் சிங் உள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் மோடி பிரேசில் சென்றபோதும் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ராஜ்நாத் சிங்கிடம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT