Published : 08 Sep 2018 08:54 AM
Last Updated : 08 Sep 2018 08:54 AM
தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தை தொடர்ந்து, புதிய படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார். இதை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கியுள்ளது. தனுஷின் நண்பர் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகவும் இப்படத்தில் இணைகின்றனர். நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், காந்த் முக்கிய கதாபாத்திரம் ஏற்கின்றனர். இவர்களோடு நடிகை அதிதிராவ் ஒப்பந்தமாகியுள்ளார். ஆன்மிகம், சாமியார்கள், மந்திரம் என்று நகரும் இப்படத்துக்கு ‘ருத்ரன்’ என்று பெயரிடப்படலாம் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT