Published : 19 Sep 2018 06:01 PM
Last Updated : 19 Sep 2018 06:01 PM

சிம்புவுக்கு குரல் கொடுத்த நடிகர்

சிம்புவுக்கு தெலுங்கு நடிகர் சத்யதேவ் டப்பிங் பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் என நிறைய நட்சத்திர நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.

வருகிற 27-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தப் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியிடப்படுகிறது. எனவே, சிம்புவின் கேரக்டருக்குத் தெலுங்கு நடிகர் சத்யதேவ் டப்பிங் பேசியுள்ளார். ‘அத்தரண்டிகி தாரேதி’, ‘ஜோதிலக்‌ஷ்மி’, ‘காஸி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சத்யதேவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x