Published : 14 Jun 2019 07:36 AM
Last Updated : 14 Jun 2019 07:36 AM

ரெட்டை ரோஜா!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ரெட்டை ரோஜா’ என்ற  புதிய தொடர் ஜூலையில் தொடங்க உள்ளது. ஷிவானி, அக்சய், சித்தார்த், சபிதா ஆனந்த், பூவிலங்கு மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் இத்தொடரை ‘பூவே பூச்சூடவா’ தொடரின் தயாரிப்பாளர் நாராயணன் தயாரிக்கிறார்.

மின்வாரிய வயர்மேனான பூவிலங்கு மோகனுக்கு அபி, அனு என இரட்டைக் குழந்தைகள். மூத்தவள் புத்திசாலி, தைரியசாலி. இளையவள் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவள். இருவரும் வளர்ந்து, வழக்கறிஞராகவும், தையல்கலைஞராகவும் ஆகின்றனர். இந்த இரட்டை கதாபாத்திரத்தில் ஷிவானி நடிக்கிறார். சீரியலின் நாயகன் சந்தோஷ் (சாகர்), பைக் ஷோரூம் உரிமையாளர். தனது அத்தை போடும் முட்டுக்கட்டையை மீறி, இவரும் இவரது தம்பி சஞ்சீவியும் (அக்சய்) அபி - அனு குடும்பத்துக்குள் நுழைகின்றனர். இவ்வாறு  கதை விரிகிறது.

தெலுங்கில் ‘அக்கா செல்லுலு’ என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இத்தொடரை தமிழில் ‘பூவே பூச்சூடவா’ தொடரின் இயக்குநர் மணிகண்ட குமார் இயக்குகிறார். மித்ரா சரவணன் வசனம் எழுதுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x