Last Updated : 08 Mar, 2018 12:42 PM

 

Published : 08 Mar 2018 12:42 PM
Last Updated : 08 Mar 2018 12:42 PM

திரையில் மீண்டும் ஜோடிசேரும் சமந்தா – நாக சைதன்யா

நிஜ வாழ்வில் இணைந்த சமந்தா – நாக சைதன்யா இருவரும் பல நாட்களுக்குப் பிறகு திரையில் இணைய இருக்கின்றனர்.

சமந்தா – நாக சைதன்யா இருவரும் சேர்ந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்துள்ளனர். ஒன்றாக நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இந்தக் காதல், கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

2014ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படம்தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம். அதன்பிறகு எந்தப் படத்திலும் இணைந்து நடிக்காத இவர்கள், மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இந்தப் படத்தை இயக்குகிறார். ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அத்துடன், ‘சீம ராஜா’, ‘நடிகையர் திலகம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘யு டர்ன் ரீமேக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x