Published : 02 Mar 2018 06:01 PM
Last Updated : 02 Mar 2018 06:01 PM
மார்ச் 4-ம் தேதி ஈரோட்டில் நடிகர் கதிர் - சஞ்சனா திருமணம் நடைபெறவுள்ளது.
'மதயானைக் கூட்டம்', 'கிருமி', 'விக்ரம் வேதா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கதிர். தற்போது ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'பரியேறும் பெருமாள்' படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார்.
மேலும், ஜெகதீசன் சுபு இயக்கத்தில் கதிர் நடிப்பில் 'சிகை' படம் விரைவில் வெளியாக உள்ளது.
கதிரும், பிசினஸ் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்கும் சஞ்சனாவுக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமண வரவேற்பு மார்ச் 3-ம் தேதி மாலையும், மார்ச் 4-ம் தேதி காலை திருமணமும் ஈரோட்டில் நடைபெறவுள்ளது.
பல்வேறு முன்னணி திரையுலகினர் இத்திருமணத்தில் கலந்துகொண்டு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்கவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT