Last Updated : 16 Mar, 2018 07:41 PM

 

Published : 16 Mar 2018 07:41 PM
Last Updated : 16 Mar 2018 07:41 PM

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!

விவசாயிகள் பிரச்சினையை திரையில் வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ படம், மீண்டும் ரிலீஸாக இருக்கிறது.

இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸான படம் ‘கத்துக்குட்டி’. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு குறித்து இந்தப் படத்தில் வலுவாகப் பதிவு செய்யப்பட்டது.

நரேன் ஹீரோவாக நடிக்க, சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடித்தார். காமெடி வேடத்தில் சூரி கலக்கியிருந்தார். தஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின் வாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.

‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இது’ வைகோ மற்றும் பாரதிராஜா பாராட்ட, ‘ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம்’ என சீமான் கொண்டாடினார். இப்படி பலரின் பாராட்டையும் பெற்ற ‘கத்துக்குட்டி’, வருகிற 23 ஆம் தேதி முதல் மீண்டும் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x