Published : 27 Sep 2014 04:37 PM
Last Updated : 27 Sep 2014 04:37 PM
தமிழகம் எங்கிலும் பதற்றம் நிலவுவதால், அசாதாரண சூழலை தவிர்க்கும் விதமாக சென்னை-புதுச்சேரி இடையிலான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பதற்றம் நிலவுகிறது.
புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அமைதியான சூழல் நிலவினாலும், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க, சென்னை-புதுச்சேரி இடையிலான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகம், திமுக அலுவலகங்கள் அங்கு வெறிச்சோடி காணப்படுகின்றன. பதற்றம் ஏற்படக்கூடிய இடங்களில் புதுச்சேரி போலீஸார் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.