Published : 08 Sep 2014 11:33 AM
Last Updated : 08 Sep 2014 11:33 AM

செப்.18-ல் கத்தி இசை வெளியீடு: செளந்தர்யா ரஜினி அறிவிப்பு

'கத்தி' இசை இம்மாதம் 18-ம் தேதி வெளியாகும் என்று ஈராஸ் நிறுவனத்தின் தென்னந்திய மேலாளர் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிக்க, அனிருத் இசையமைத்து இருக்கும் 'கத்தி' படத்தின் இசையை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஈராஸ் நிறுவனம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'கத்தி'. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் இசை உரிமையை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் இந்தியில் முன்னணி நிறுவனமான ஈராஸ் நிறுவனம் 'கத்தி' இசையினை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது.

'மாற்றான்', 'கோச்சடையான்' போன்ற படங்களை விநியோகம் மட்டுமே செய்து வந்த ஈராஸ் நிறுவனம், 'கத்தி' இசையின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் இசை நிறுவனமாகவும் கால் பதித்துள்ளது.

ஈராஸ் நிறுவனத்தின் தென்னந்திய மேலாளராக சமீபத்தில் தான் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பொறுப்பேற்றார்.

'கத்தி' இசை மட்டுமன்றி, படத்தினையும் ஈராஸ் நிறுவனம் மூலமாக வெளியிட பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருக்கின்றன.

இந்த நிலையில், 'கத்தி' இசை செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் என்று ஈராஸ் நிறுவனத்தின் தென்னந்திய மேலாளர் செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x