Last Updated : 27 Apr, 2019 12:35 PM

 

Published : 27 Apr 2019 12:35 PM
Last Updated : 27 Apr 2019 12:35 PM

கார்த்தி - ஜோதிகா - சத்யராஜ் கூட்டணி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிக்கவுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

'பாபநாசம்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த தமிழ்ப் படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். இதற்கான முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். அக்கதையில் கார்த்தி நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இதன் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 27) தொடங்கப்பட்டுள்ளது. இதில், கார்த்தியுடன் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.

இப்படத்தை ஒரே கட்டமாக முடித்த பிறகுதான், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x