Last Updated : 02 Apr, 2019 09:19 AM

 

Published : 02 Apr 2019 09:19 AM
Last Updated : 02 Apr 2019 09:19 AM

தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது: மகேந்திரனுக்கு இயக்குநர் சீனு ராமசாமி புகழாஞ்சலி

தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது என்று இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது.வரலாறு மறக்க முடியாத  இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தமிழ் படைப்பாளி என் முன்னோடி ஆசான் இயக்குனர் மகேந்திரன். இதய அஞ்சலி சார்.

இவ்வாறு இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x