Published : 10 Apr 2019 10:21 AM
Last Updated : 10 Apr 2019 10:21 AM

காதலும் போராட்டமும்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி வரும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படம் எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட வேலைகளில் உள்ளது. போருக்கு எதிரான ஒரு படமாக உருவாகி வரும் இப்படத்தைப் பற்றி இயக்குநர் அதியன் ஆதிரை கூறியதாவது:

‘‘இங்கே சுனாமி தொடங்கி காய்கறி விலை ஏற்றம் வரைக்கும் எந்த ஒரு மாறுதல் நடந்தாலும், அது கடைக்கோடி மனிதனின் கனவைத்தான் சிதைக்கிறது. அது, சாதாரண விளிம்பு நிலை மனிதனை தன் இயல்பான வாழ்க்கையில் இருந்து இடம்பெயரச் செய்துவிடுகிறது. அதைப் பற்றி பேசும் படம்தான் இது. தென் தமிழகத்தை களமாகக் கொண்டு உருவாகும் படங்களுக்கு நடுவே, இப்படம் விழுப்புரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் மண் வாசம் வீசும் பேச்சுத் தமிழில் உருவாகிறது.  நடிகர் தினேஷ்  லாரி ஓட்டுநராகவும், நடிகை ஆனந்தி கிராமத்து கல்லூரி மாணவியாகவும்  நடிக்கிறார்கள்!’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x