Last Updated : 29 Apr, 2019 05:38 PM

 

Published : 29 Apr 2019 05:38 PM
Last Updated : 29 Apr 2019 05:38 PM

மகேஷ்பாபு, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் பணிபுரிய விரும்பும் ஹாலிவுட் நடிகர், இயக்குநர்

மகேஷ்பாபு, ஏ.ஆர்.முருகதாஸ், வம்சி ஆகியோருடன் இணைந்து பணிபுரிய விரும்புவதாக ஹாலிவுட் நடிகர் பில் ட்யூக் தெரிவித்துள்ளார்.

'கமாண்டோ', 'ப்ரிடேட்டர்', 'எக்ஸ்மேன்: தி லாஸ் ஸ்டாண்ட்' உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் பில் ட்யூக். நடிகர் மட்டுமன்றி இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தற்போது தென்னிந்திய திரையுலக நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் பணிபுரிய விரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “இயக்குநர் வம்சி மற்றும் மகேஷ்பாபு, லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் போது லஞ்ச்சிற்கு வாருங்கள். நாம் ஒரு ஹாலிவுட் ஸ்பை மூவி தொடர்பாக விவாதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மகேஷ்பாபு, லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் போது லஞ்ச்சிற்கு வாருங்கள். நாம் ஒரு ஹாலிவுட் ஸ்பை மூவி தொடர்பாக விவாதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் பில் ட்யூக்.

மேலும் “ஐஸ்வர்யா தனுஷ், லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் போது லஞ்ச்சிற்கு வாருங்கள். நாம் பெண்கள் படிப்பு தொடர்பான சர்வதேச திட்டத்தில் இணைவது குறித்து விவாதிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார் பில் ட்யூக். இந்த ட்வீட்கள் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த படம் 'ஸ்பைடர்'. இப்படம் ஸ்பை த்ரில்லர் வகையில் தான் உருவாக்கப்பட்டது. இப்படத்தை பார்த்து தான், ஹாலிவுட் ஸ்பை மூவி உருவாக்கலாம் என்று பில் ட்யூக் தெரிவித்துள்ளார் என மகேஷ்பாபு நடிகர் உற்சாகமாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x