Last Updated : 11 Apr, 2019 02:36 PM

 

Published : 11 Apr 2019 02:36 PM
Last Updated : 11 Apr 2019 02:36 PM

நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்

'சலீம்' இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'சலீம்'. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிர்மல் குமார். இவர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

'சலீம்' படத்தைத் தொடர்ந்து 'சதுரங்க வேட்டை 2' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பைனான்ஸ் சிக்கலில் இருக்கிறது. இதனை வெளிக்கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தெலுங்குப் படம், தமிழில் அரவிந்த்சாமி நடிக்கும் படம் ஆகியவற்றை இயக்க ஒப்பந்தமானார் நிர்மல் குமார். ஆனால், திடீர் திருப்பமாக சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று (ஏப்ரல் 10) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

எது முதலில் வரும் என்பது குறித்து விசாரித்த போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அதை முதலில் முடிக்கவுள்ளார் நிர்மல் குமார். அதனைத் தொடர்ந்து சசிகுமார் படத்தின் படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெறும்.

ஒரே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், சசிகுமார் நடிக்கும் படம் என இரண்டிலுமே கவனம் செலுத்தவுள்ளார் நிர்மல் குமார். ஆகஸ்ட் மாதத்தில் தான் அரவிந்த்சாமி நடிக்கவுள்ள புதிய படத்தைத் தொடங்கவுள்ளார். அதற்கு முன்னதாக தான் ஒப்பந்தமான அனைத்து படங்களின் பணிகளையும் முடிக்கத் தீவிரம் காட்டி வருகிறார் நிர்மல்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x