Last Updated : 27 Apr, 2019 10:43 AM

 

Published : 27 Apr 2019 10:43 AM
Last Updated : 27 Apr 2019 10:43 AM

மீண்டும் இணையும் நாடோடிகள் 2 படக்குழு

'நாடோடிகள் 2' படக்குழுவினர் மீண்டும் இணைந்து பணிபுரிவது என்று முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

'நாடோடிகள்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'நாடோடிகள் 2' படத்தை இயக்கியுள்ளார் சமுத்திரக்கனி. முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதன் பணிகள் அனைத்துமே முடிவடைந்து, வெளியீட்டு தேதிக்காகக் காத்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 26) இயக்குநர் சமுத்திரக்கனியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தனது பிறந்த நாளை முன்னிட்டு, அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சமுத்திரக்கனி. அதிலும் சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பெயரிடப்படாத இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவித்துள்ளார் சமுத்திரக்கனி.

'ஆர்.ஆர்.ஆர்', 'சில்லு கருப்பட்டி', 'அடுத்த சாட்டை', 'ஆகாசவாணி' உள்ளிட்ட பல படங்களில் நடிகராக கவனம் செலுத்தி வந்தாலும், இயக்கத்திலும் தொடர்ச்சியாக சமுத்திரக்கனி கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x