Published : 02 Apr 2019 07:50 PM
Last Updated : 02 Apr 2019 07:50 PM

திரையுலகினரின் ஆற்றொனாத்துயரில் பங்கு கொள்கிறேன்: இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

திரையுலகினரின் ஆற்றொனாத்துயரில் பங்கு கொள்கிறேன் என இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்த் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனின் மறைவு, சினிமாத்துறைக்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, திரையுலகினரின் ஆற்றொனாத்துயரில் பங்கு கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x