Last Updated : 02 Apr, 2019 09:16 AM

 

Published : 02 Apr 2019 09:16 AM
Last Updated : 02 Apr 2019 09:16 AM

எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள்: மகேந்திரனுக்கு சேரன் புகழாஞ்சலி

எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள் என்று இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', ’உதிரிப்பூக்கள்’, 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது:

'முள்ளும் மலரும்' என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலரவேண்டும். 'உதிரிப்பூக்கள்' எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள். உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள்... நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக வந்துபோகின்றன.

இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x