Published : 02 Apr 2019 06:16 PM
Last Updated : 02 Apr 2019 06:16 PM

மகத்தானவர்கள் என்றும் மறக்கப்படுவதில்லை: இயக்குநர் மகேந்திரனுக்கு வரலட்சுமி சரத்குமார் புகழாஞ்சலி

மகத்தானவர்கள் என்றும் மறக்கப்படுவதில்லை என இயக்குநர் மகேந்திரனுக்குப் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

மகேந்திரன் சாருக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தினேன். நீங்கள் அமைதியாகக் காணப்பட்டீர்கள். உங்களை மறக்க முடியாது. உங்கள் தந்தையையும், அவர் விட்டுச் சென்றுள்ள அற்புதமான சினிமா மரபையும் நினைத்து நீங்கள் பெருமைப்பட வேண்டும் ஜான் ரோஷன் சார். அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். மகத்தானவர்கள் என்றும் மறக்கப்படுவதில்லை.

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x