Last Updated : 02 Apr, 2019 12:55 PM

 

Published : 02 Apr 2019 12:55 PM
Last Updated : 02 Apr 2019 12:55 PM

இறுதிவரை எல்லோரையும் உற்சாகப்படுத்தியவர்: மகேந்திரனுக்கு சிம்புதேவன் புகழாஞ்சலி

இறுதிவரை எல்லோரையும் உற்சாகப்படுத்தியவர் மகேந்திரன் என்று இயக்குநர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

வயதில் சிறியவர்களைக்கூட மிஸ்டர் எனக் கூறி அழைக்கும் மிக அன்பிற்குரிய, பண்பிற்குரிய மாபெரும் இயக்குநர் எங்கள் மகேந்திரன் சார். இறுதிவரை எல்லோரையும் உற்சாகப்படுத்தினீர்கள். தங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் மிஸ்டர் மகேந்திரன் சார்.

இவ்வாறு சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x