Last Updated : 28 Apr, 2019 10:16 AM

 

Published : 28 Apr 2019 10:16 AM
Last Updated : 28 Apr 2019 10:16 AM

மீண்டும் புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ஜோதிகா: சூர்யா தயாரிக்கிறார்

புதுமுக இயக்குநர் ப்ரெட்ரிக் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். இதனை சூர்யா தயாரிக்கிறார்.

புதுமுக இயக்குநர் எஸ்.ராஜ், 'குலேபகாவலி' கல்யாண் ஆகியோரது இயக்கத்தில் உருவான படங்களில் நடித்து முடித்துள்ளார் ஜோதிகா. இதில் எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனமும், கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி, சத்யராஜ் ஆகியோருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா. இதன் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 27) தொடங்கியுள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் பெர்டிரிக் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஜோதிகா. 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். இதில் ஜோதிகாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஷ்ல்டாவின் கணவர் தான் இயக்குநர் பெர்டிரிக். தமிழ் திரையுலகில் ஜாய் பல முன்னணி நாயகரின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x