Last Updated : 02 Apr, 2019 12:04 PM

 

Published : 02 Apr 2019 12:04 PM
Last Updated : 02 Apr 2019 12:04 PM

எழுத்திலும் சிந்தனையிலும் முன்னோடி: மகேந்திரனுக்கு சுஹாசினி புகழாஞ்சலி

எழுத்திலும் சிந்தனையிலும் முன்னோடியாக இருந்தவர் மகேந்திரன் என்று நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து நடிகை சுஹாசினி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

எனது வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் சார் ஆன்மா சாந்தியடையட்டும். எழுத்திலும் சிந்தனையிலும் நீங்கள் முன்னோடியாக இருந்தீர்கள். நாங்கள் அனைவரும் உங்கள் மாணவர்கள். நிஜ சினிமாவுக்கு வழிகாட்டிய உங்களுக்கு நன்றி.

இவ்வாறு நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவு துறைக்குப் படித்து திரையுலகில் பணிபுரிந்து வந்த சுஹாசினியை, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x