Last Updated : 02 Apr, 2019 12:58 PM

 

Published : 02 Apr 2019 12:58 PM
Last Updated : 02 Apr 2019 12:58 PM

அவரது படங்கள் மிகப்பெரிய உந்துசக்தி: மகேந்திரனுக்கு பி.சி.ஸ்ரீராம் புகழாஞ்சலி

அவரது படங்கள் மிகப்பெரிய உந்துசக்தி என்று இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

மகேந்திரன்... அவர் குறைவாகப் பேசினார். அவரது படங்கள் அதிகமாகப் பேசின. எனக்கு அவரது படங்கள்தான் மிகப்பெரிய உந்துசக்தி. ‘உதிரிப்பூக்கள்’ பார்த்தபிறகு பல இரவுகள் தூக்கமின்றி இருந்ததை என்னால் மறக்க முடியாது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x