Last Updated : 11 Apr, 2019 02:37 PM

 

Published : 11 Apr 2019 02:37 PM
Last Updated : 11 Apr 2019 02:37 PM

தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம்: இயக்குநர் சேரன் வேதனை

மக்களவைத் தேர்தலில் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 16-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக கூட்டணித் தலைவர்கள் பலரும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தங்களுடைய பிரச்சாரத்தில் தலைவர்கள் பலரும் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்துப் பேசி வருகிறார்கள்.

இது தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க.. யாரும் தீர்வை நோக்கி நகரவேயில்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள்  சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை.. ஆனால் வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும்.. யாரை நம்பி மாற்றம் தேடுவது... சாதாரண வாக்களனாய் எனக்கு தோன்றியது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x