Published : 24 Mar 2019 02:13 PM
Last Updated : 24 Mar 2019 02:13 PM

ராதாரவியின் பேச்சால் சர்ச்சை: நடிகர்கள் மீது சின்மயி காட்டம்

நயன்தாரா குறித்து ராதாரவி பேச்சு சர்ச்சையாகி இருப்பது தொடர்பாக, நடிகர்களை கடுமையாக சாடியுள்ளார் சின்மயி.

சக்ரி டோலட்டி இயக்கத்தி நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

இவ்விழாவில் பேசும் போது நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள்.

ராதாரவியின் பேச்சு குறித்து சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் என் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கியிருந்தனர். காரணம் அவர்கள் வேறு யூனியன் விஷயத்தில் தலையிட முடியாது என்பதால். ஆனால், இந்த முறை அந்த நபர் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையையல்லவா மேடையில் சீண்டியுள்ளார்.

இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். முடிந்தால் எடுங்கள். அப்படி எடுத்தால் ரொம்ப நன்றி. நேற்றிலிருந்து நடிகர்கள் யாரேனும் வாய் திறந்து கண்டனத்தை தெரிவிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வீடியோவில் ராதாரவி அந்த நடிகையின் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகையை மிகவும் தரக் குறைவாகப் பேசுகிறார். ஒருவரும் ஒரு வார்த்தைகூட கண்டனம் தெரிவிக்கவில்லை.

அப்புறம் கூப்பிடுறவுங்க கூப்பிடுவாங்கன்னு சொல்றாரே ராதாரவி, அந்த கூப்பிடுற ஆம்பளைங்க யாரு? அவங்கள தானே அசிங்கப் படுத்தணும்?''.

இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x