Last Updated : 26 Mar, 2019 11:36 AM

 

Published : 26 Mar 2019 11:36 AM
Last Updated : 26 Mar 2019 11:36 AM

உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம் ராதாரவி: சமந்தா சாடல்

உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம் என்று ராதாரவியின் சர்ச்சைப் பேச்சை சமந்தா சாடியுள்ளார்.

'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராதாரவியின் பேச்சுக் குறித்து முன்னணி நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அய்யோ பாவம், ராதாரவி அவர்களே, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும் பாடு இருக்கிறதே. நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள். உங்கள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர்ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள்.

இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x