Published : 31 Mar 2019 07:59 AM
Last Updated : 31 Mar 2019 07:59 AM

இரண்டாவது தயாரிப்பு!

‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ தொடங்கி ‘சென்னை 28’ உள்ளிட்ட  பல படங்களில் குணச்சித்திரம், கதாநாயகன் என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நிதின் சத்யா. கடந்த ஆண்டு ஜெய் நடித்த ‘ஜருகண்டி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். தற்போது தனது ‘ஷ்வேத் நிதின்’ சத்யா பட நிறுவனம் சார்பில் 2-வது தயாரிப்பைத் தொடங்கிவிட்டார். ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இயக்குராக அறிமுகமாகிறார். வைபவ் கதாநாயகனாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடி வாணி போஜன். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் நடிக்கவுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இதற்கு இசை ஆரோல் கரோலி. விரைவில் தலைப்புடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க  உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x