Last Updated : 28 Mar, 2019 09:32 AM

 

Published : 28 Mar 2019 09:32 AM
Last Updated : 28 Mar 2019 09:32 AM

சுந்தர்.சி படப்பிடிப்பில் விஷாலுக்கு பலத்த காயம்

சுந்தர்.சி படத்துக்காக நடைபெற்ற படப்பிடிப்பில் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனயில் சிகிச்சை கொடுக்கப்பட்டது.

'அயோக்யா' படத்தைத் தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். தமன்னா நாயகியாக நடித்து வரும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பைக் சண்டைக்காட்சி ஒன்றை சண்டை இயக்குநர் அன்பறிவு இயக்கத்தில் படமாக்கி வந்தார்கள். அப்போது பைக்கில் விஷால் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. இடது கையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சின்ன காயம் தானா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா அல்லது விஷால் இந்தியா திரும்புகிறாரா என்பது விரைவில் தெரியவரும். இது தொடர்பாக விசாரித்த போது, "விஷால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்" என்று தெரிவித்தனர். ஆனால், படக்குழுவினர் இன்னும் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x