Published : 27 Feb 2019 01:02 PM
Last Updated : 27 Feb 2019 01:02 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி.
லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'தளபதி' படத்துக்குப் பிறகு, இப்படத்தில் தான் ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் சந்தோஷ் சிவன்.
தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருவது உறுதியாகியுள்ளது. 'பேட்ட' படத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினி படத்துக்கு இசையமைக்கவுள்ளார் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு. ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக ரஜினி 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT