Published : 07 Feb 2019 11:33 AM
Last Updated : 07 Feb 2019 11:33 AM

ரஜினியுடன் முதன்முறையாக இணைகிறார் யோகிபாபு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபுவிடம் பேசியுள்ளது படக்குழு.

'பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.

இப்படத்துக்கான நடிகர்கள் தேர்வைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதில் படம் முழுக்க ரஜினியுடனே வரும் முக்கிய கதாபாத்திரத்துக்கு யோகிபாபுவிடம் பேசியுள்ளனர். அவரோ 'தளபதி 63' படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு எப்போது என முடிவானவுடன், கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் யோகிபாபு. இதன் மூலம் ரஜினியுடன் முதன்முறையாக கூட்டணி போடவுள்ளார் யோகிபாபு. முன்பாகவே 'பேட்ட' படத்தில் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் யோகிபாபுவிடம் தான் பேசினார்கள். தேதிகள் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல ஆயுத்தமாகி வருகிறது படக்குழு. தற்போது திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x