Published : 10 Jan 2019 08:58 AM
Last Updated : 10 Jan 2019 08:58 AM

மேகா ஆகாஷின் மகிழ்ச்சி

தமிழில் ஏற்கெனவே தான் நடித்துள்ள படங்கள் இன்னும் வெளிவராத நிலையில், ரஜினியின் ‘பேட்ட’ படம் மூலம் தமிழில் அறிமுகமாவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் மேகா ஆகாஷ்.

‘ஒரு பக்க கதை,’ ‘எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களின் வழியாக தமிழுக்கு வந்தவர் மேகா ஆகாஷ். இதுவரை அந்த 2 படங்களும் வெளிவராத சூழலில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்தார். இந்த படம் பிப்ரவரியில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் ரஜினியின் ‘பேட்ட’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அந்த 3 படங்களையும் முந்திக்கொண்டு, தற்போது ‘பேட்ட’ முதலில் ரிலீஸாவதால், இந்த படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகும் நடிகை என்ற பட்டியலில் இடம்பெறுகிறார் மேகா ஆகாஷ். இதை சக நண்பர்களிடம் உற்சாகத்துடன் பகிர்ந்துவருகிறார். இன்னொரு மகிழ்ச்சியாக, இந்தியில் உருவாகும் ‘சாட்டிலைட் சங்கர்’ படத்தில் நடித்து வருவதையும் பகிர்ந்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x