Published : 06 Jan 2019 03:59 PM
Last Updated : 06 Jan 2019 03:59 PM
அஜித்தை வைத்து 5-வது படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் அது வரம் என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஜனவரி 10-ம் தேதி 'விஸ்வாசம்' வெளிவரவுள்ளது. இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சிவா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்குள்ளும் 'விஸ்வாசம்' இருக்க வேண்டும் என்ற கருத்தை இப்படத்தில் சொல்லியுள்ளேன். அதனால் தான் இந்த தலைப்பு வைத்தேன். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவராக அஜித் நடித்துள்ளார்.
மதுரை தமிழில் பேசி நடித்துள்ளார். படத்தின் கதை 2 காலகட்டங்களில் நடக்கும். அதில் நிரஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்று சந்தோஷமாக பார்க்கும் வகையில் தான் இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.
அஜித் சார் ஒரு நல்ல மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து 4 படங்களை இயக்கியதே ரொம்ப சந்தோஷம். 5-வது ஒரு படம் கிடைத்தால், அது வரம்.
இவ்வாறு இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT